கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து - 27 பேர் காயம் - 7 பேர் ஆபத்தான நிலையில்.....
கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகரிற்கு 500 மீற்றர் தூரத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியொன்றும் விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வீதி விபத்து
விபத்தைத் தடுக்க ஓட்டுநர் பேருந்தை வீதியில் இருந்து அகற்ற முயன்றபோது, மண் தளர்வாக இருந்ததால், பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 07 பேர் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலையிலும், 20 பேர் கஹவத்தை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri