இந்தியாவில் கோர விபத்து.. குறைந்தது 15 பேர் பலி!
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பலோடி மாவட்டத்தின் மடோடா பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிகானேர் மாவட்டத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனம் ஒன்றின் மீது மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததால் அங்கிருந்த பலர் உயிரிழந்தனர்.
உயிரிழப்புக்கான காரணம்
மேலும், காயமடைந்தவர்கள், அப்பிரதேச மக்களுடன் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அத்துடன், பலத்த காயமடைந்தவர்கள் விமானம் மூலம் ஜோத்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேருந்தில் அவசரகால வெளியேறும் கதவு இல்லாததே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறிருக்க, சம்பவம் தொடர்பான விசாரணைகளை ராஜஸ்தான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 16 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam