கிளிநொச்சியில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி - பூநகரி வாடியடி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று (11-04-2024)இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பொலிஸார் விசாரணை
பூநகரி பகுதியில், கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவ்வாறு சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தின் போது பூனகரி பள்ளிக்குடா பூனகரியை சேர்ந்த இராஜலிங்கம் சங்கீதன் ( வயது 36 ) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், விபத்து தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
