வட்டவளையில் 20அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி: இருவர் வைத்தியசாலையில்..
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(21.02.2026) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்காக சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வடக்கு கிழக்கை பிரித்த ஜேவிபி மாகாணத்திற்கு அதிகாரங்களை கையளிக்க விரும்பமாட்டார்கள் - கலாநிதி விக்னேஸ்வரன்!
பொலிஸார் விசாரணை
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், சிங்கள பாடசாலைக்கு சமீபமாக லொறியொன்று பாதாள மதகு ஒன்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட உதவியாளர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, படுகாயமடைந்த இருவரும், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை களைப்பு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, லொறி விபத்துக்குள்ளான இடத்தில் மற்றுமொரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று இவ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் பயணித்த பயணி ஒருவர், லொறி விபத்தை வேடிக்கை பார்ப்பதற்காக கீழே இறங்கியுள்ளார்.
இதன்பின்னர் மீண்டும் பேருந்தில் ஏற முயன்றபோது, பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி அவரது கால் நசுங்கியுள்ளது. படுகாயமடைந்த அவரும் சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன கமகே தலைமையிலான போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் இவ்விரு விபத்துக்கள் குறித்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல் - ராகேஸ்

இன அழிப்பில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டி திஸ்ஸ விகாரை! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு
இந்த வார விஜய் டிவி சீரியல்களின் TRP ரேட்டிங்.. எந்த சீரியல் முதலிடத்தில் உள்ளது தெரியுமா? Cineulagam