தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து ஓமந்தையில் விபத்து
Covid
Accident
Bus
Omanthai
Covid center
By Independent Writer
வவுனியா - ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து இன்று அதிகாலை விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த பேருந்து வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய பயணிகளை ஏற்றிக் கொண்டு பூநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையிலேயே விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது பேருந்து ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் வீதி கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை பேருந்தில் 7 பேர் பயணம் செய்த போதும் சம்பவத்தால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US