வவுணதீவு, வாழைக்காட்டு சந்தியில் வானுடன் மோதிய மோட்டார்சைக்கிள்: ஒருவர் பலி
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள வாழைக்காடு சந்தியில் வான் ஒன்றும் மோட்டர்சைக்கிளும் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணித்த கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த மைலப்போடி சுந்தரலிங்கம் (வயது 58) என்ற நபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் வான் சாரதியை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam