சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி விபத்து - திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனமொன்றும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.
குறித்த சம்பவம் இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவத்தில் 36 வயதுடைய ஒருவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், காயமடைந்தவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹபரனையிலிருந்து கந்தளாய் பகுதிக்கு வேகமாக பயணித்த மோட்டார்சைக்கிள் திருகோணமலையிலிருந்து தம்புள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதி பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
