யாழில் கோர விபத்து - நபர் ஒருவர் பரிதாபமாக பலி
யாழ்ப்பாணம் அம்மன் வீதியில் மோட்டார்சைக்கிளொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
ஒருவர் பலி
இந்த சம்பவத்தில் நல்லூரைச் சேர்ந்த 49 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பேருந்து மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்து
இதேவேளை இன்று காலை வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் பேருந்து மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன.
இதன்போது டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.