இலங்கை பெண்கள் வெளிநாட்டில் விற்பனை - முக்கிய அதிகாரியின் கடவுச்சீட்டு ரத்து
இலங்கை தூதரகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அதிகாரியான குஷானின் இராஜதந்திர விமான கடவுசீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஓமானில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 03வது அதிகாரியாக பணியாற்றிய குஷானுக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அவரை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.