அமெரிக்க அலாஸ்கா கடற்கரையில் கைவிடப்பட்ட சரக்குக் கப்பல்
800 மின்சார வாகனங்கள் உட்பட சுமார் 3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல், அமெரிக்க, அலாஸ்கா கடற்கரையில் கைவிடப்பட்டுள்ளது.
கடும் தீப்பரவலை அடுத்து, அதனை கைவிட்டதாக, கப்பலின் இயக்குநரான சோடியாக் மேரிடைம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
22 பணியாளர்கள்
தீயை கட்டுப்படுத்த முடியாமை காரணமாக, 22 பணியாளர்கள் கப்பலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
Another possible EV fire on a cargo ship. A cargo ship carrying about 3000 cars with about 800 EV vehicles to Mexico, catches fire and is abandoned in the Pacific off Alaska. U.S. Coast Guard evacuated all 22 crew members. pic.twitter.com/20734rhOyd
— Max Maximus (@SciTechAccess) June 5, 2025
மோர்னிங் மிடாஸ் என்ற கப்பல், அலாஸ்காவில் உள்ள அடாக்கிலிருந்து தென்மேற்கே 300 கடல் மைல் தொலைவில் வைத்து, தீப்பற்றிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
லைபீரியா கொடியுடன் கூடிய இந்த கப்பல் மே 26 அன்று சீனாவின் யான்டாய் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு மெக்சிகோவின் லாசரோ கார்டனாஸுக்குச் சென்று கொண்டிருந்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கப்பல் எந்த வகையான வாகனங்களை எடுத்துச் சென்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
