இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் அடுத்த வாரம் முதல் இலங்கை சந்தையில்! வெளியான புதிய தகவல்
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை அடுத்த வாரம் முதல் இலங்கை சந்தையில் வெளியிட முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதியமைச்சர் என்ற ரீதியில் வெளியிட்ட விசேட வர்த்தமானி மூலம் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் இருந்த தடைகளை நீக்கியமையால் இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளதாக தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.
தடைகளை நீக்கி விசேட வர்த்தமானி
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் இருந்த தடைகளை நீக்கி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதியமைச்சர் என்ற வகையில் விசேட வர்த்தமானியை வெளியிட்டார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் இரண்டாவது பங்குகளில் 462 மின்சார வாகனங்களை உள்ளூர் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
