ஆனந்த தேராின் வேந்தா் நியமனத்துக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவா் ஒன்றியம் எதிா்ப்பு
கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு, கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மாணவர் சமூகமும் ஏகமனதாக அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவி என்பது ஒருபோதும் அரசியல் நியமனமாகவோ அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் வகையிலோ அமையக்கூடாது என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறுகிறது.
வேந்தருக்கு சட்டப்பூர்வ நிர்வாக அதிகாரங்கள் இல்லை என்றாலும், அவர் பல்கலைக்கழகத்தின் கௌரவத்தின் சின்னமாக, குறிப்பாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறாா்.
இந்தநிலையில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கான அரசியல் நியமனம் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சுதந்திரத்தையும் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த கண்ணியத்தையும் அழிக்கக்கூடும் என்று மாணவர் ஒன்றியமும்,மாணவா் சங்கமும் எச்சாிக்கை விடுத்துள்ளன.
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri