திருகோணமலையில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று (24) அதிகாலை இடம் பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலினால் திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த கே.ஜே.எஸ்.பிரசன்ன குமார (27வயது) என்ற இளைஞர் காயம் அடைந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
நண்பர்களுடன் விருந்துபச்சாரம் ஒன்றிற்கு சென்று வீடு திரும்பிய நிலையில், தனிமையாக உறங்கிக் கொண்டிருந்த போதே தாக்குதல் மெற்கொள்ளப்பட்டுள்ளது.
உறங்கிக் கொண்டிருந்த போது வாளால் வெட்டிய நிலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொலைபேசி மூலம் சகோதரிக்கு தெரியப்படுத்தியதாகவும் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam