திருகோணமலையில் வான் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை - கந்தளாய், அக்போபுர கித்துள் ஊற்று பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று(17.07.2024) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணை
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வான் மோதியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, கந்தளாய் கித்துளுத்து பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வான் சாரதி நித்திரை கொண்டமையினால் சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் பெண் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கித்துள் ஊற்று பகுதியில் தற்போது விபத்து இடம்பெற்ற அதே இடத்தில் கடந்த பதினைந்து நாட்களில் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும்,பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan