பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு! - பொலிஸார் தீவிர விசாரணை
களுத்துறை, தொட்டங்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடவட்டகொட, தொடங்கொடவில் வசிக்கும் 54 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண், வட்டிக்கு பணம் கொடுப்பவர் என்று தகவல் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், குறித்த பெண் தனியாக வீட்டில் வசித்து வருவதாகவும், தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை அடையாளம் கண்டதாகவும் பொலிஸார் கூறினர்.
தலையில் காயத்துடன் இரத்தம் வழிந்ததால், படுகொலை என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இன்று பிற்பகல் விசாரணைகளை மேற்கொண்டதுடன் நீதவான் விசாரணைகளை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
