நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

Batticaloa Mannar
By Ashik Jan 01, 2026 12:16 PM GMT
Report

புதுவருடப்பிறப்பினையொட்டி கிழக்கு மாகாணத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றது.

ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெமில்டன் தலைமையிலான அருட்தந்தையர்களினால் புதுவருடத்தினையொட்டி விசேட திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.

விஜயின் கட்சியில் இருந்து நாமலுக்கு எச்சரிக்கை! எதிர்க்கட்சிகளை திணறடித்த அநுர

விஜயின் கட்சியில் இருந்து நாமலுக்கு எச்சரிக்கை! எதிர்க்கட்சிகளை திணறடித்த அநுர

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar

இதன்போது துநாட்டில் நீடித்த சமாதானமும் சாந்தியும் வேண்டி விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாக்க விசேட பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar

புதுவருட பிறப்பினையொட்டி இதன்போது விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் அனைவருக்கும் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.

புதுவருட சிறப்பு வழிபாட்டில் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது

இன்று முதல் நாட்டில் நடைமுறைக்கு வரும் புதிய வரி

இன்று முதல் நாட்டில் நடைமுறைக்கு வரும் புதிய வரி

மலர்ந்திருக்கும் புதிய ஆண்டினை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சுகுமார் குருக்களின் தலைமையில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது நாட்டு மக்களுக்கும் நாட்டின் அரசாங்கத்திற்கும் ஆசிவேண்டி விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் புதுவருட ஆசிகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar 

செய்தி - குமார்

மலையகம்

நாட்டுக்கும் வீட்டுக்கும் சாந்தி சமாதனம் சகவாழ் வேண்டி மலையக இந்து ஆலங்களில் விசேட புத்தாண்டு பூஜை இன்று அதிகாலை இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் மலரந்துள்ள புதிய புத்தாண்டினை முன்னிட்டு விநாயகர் வழிபாடு, விசேட அலங்கார பூஜை, சூரிய சந்திர வழிபாடுகள் இடம்பெற்றன.

இதில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இடர் நீங்கி இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.

இதில் பிரதேசத்தில் உள்ள பொது மக்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சற்குண சன்மதுர குருக்கள் தலைமையில் நடைபெற்றது. 

செய்தி - மலைவாஞ்சன்

வவுனியா

வவுனியா, இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் புது வருட விசேட ஆராதனை நிகழ்வுகள் இன்று (01.01) இடம் பெற்றிருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு ஆலயத்தின் பங்குத்தந்தை கிறிஸ்தோபர் அந்தோனிதாஸ் டலீமா தலைமையில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதோடு விசேட வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது.

இதன்போது நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததுடன், தமக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டார்கள்.

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar

செய்தி - திலீபன்

யாழ்ப்பாணம்

யாழ். மறைமாவட்ட வரலாற்று சிறப்புமிக்க செம்பியன்பற்று பங்கின் செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் 2026ம் ஆண்டு புது வருட பிறப்பு விழா மிக சிறப்பாக இடம்பெற்றது.

இவ் புதுவருட பிறப்பு விழா நேற்றைய தினம் நள்ளிரவு 11மணியளவில் திருச்செபமாலையுடன் 11:50 மணியளவில் செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் திருப்பலி ஆரம்பமாகி காலை 1:30 மணியளவில் திருப்பலி நிறைவு பெற்றது.

இவ் திருப்பலியில் பொது மக்கள் வடமராட்சி கிழக்கு பகுதியில் இயங்கும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அருட்தந்தை யினர் அருட்சகோதரி யினர் இளைஞர்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar  

செய்தி - எரிமலை

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த போது யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டு புத்தாண்டு வரவேற்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar 

செய்தி - தீபன்

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான தேவாலயமான புனித திரேசாள் பேராலயத்தில் 2026ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையிலான நள்ளிரவு ஆராதனைகள் இரவு 11.30 மணிக்கு கிளிநொச்சி பங்குத் தந்தையின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றன.

இதன்போது இயற்கை அனர்த்தங்களிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனை நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar

நாடு முழுவதும் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | A Weedy New Year In Mannar

செய்தி - சுடரோன்

மன்னார்

மன்னாரில் நேற்றைய தினம் புதுவருட வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தது.

இந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் மன்னார் நகர பகுதிக்கு வருகை தந்து ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர்.

நத்தார், புதுவருட பண்டிகையை முன்னிட்டு மன்னார் நகரசபையினால் வருடா வருடம் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள கேள்வி கோரல் மூலம் இடம் ஒதுக்கப்பட்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டு வருகின்றமை வழமை.

இந்த நிலையில் இம்முறை உள்ளூர் மற்றும் தென் பகுதி வர்த்தகர்கள் இடங்களை பெற்று பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், பொலிஸார் விசேட நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

2026ஆம் ஆண்டு தூய ஆவியானவரின் ஆண்டாக பிரகடனப் படுத்தப்பட்ட நிலையில் இரவு 11.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்ட பெயர் பலகையை மன்னார் மறைமாவட்ட ஆயர் திரை நீக்கம் செய்து வைத்தார்.

அதனை தொடர்ந்து நேற்று (31) இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.

இதன்போது ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கியிருந்தனர். மேலும் குறித்த புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US