தென்னிலங்கையில் மாம்பழத்தினால் வந்த வினை
தென்னிலங்கையில் 7 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாம்பழப் தோட்டத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் மாம்பழ தோட்டத்திற்குள் நுழைந்து நேற்று திருட்டுச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த தோட்ட உரிமையாளர் பிரதேசவாசிகளின் உதவியுடன் நபர்களை பிடித்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சந்தேகநபர்கள் சூரியவெவ மற்றும் ஹொரணை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் 14 வயதுடைய பாடசாலை மாணவனும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யாரு பாருங்க, போட்டோ இதோ Cineulagam

மனைவியை இழந்து, கடனில் தத்தளித்து... நடிகையுடன் திருமணம்: இன்று ரூ 4,000 கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர் News Lankasri
