யாழில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரின் தவறான முடிவு
யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப்பரீட்சைக்கு மருத்துவப்பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் நேற்று(9) தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாணவி மூன்றாவது முறையாக பரீட்சை எழுதியுள்ளார். எழுதியவற்றை மீள் சோதனை செய்து குறைந்த புள்ளிகள் வரும் என்ற அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

பொலிஸார் விசாரணை

மாணவியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் உடல் கூற்று சோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் இன்று(10) காலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam