றீ(ச்)ஷாவில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்! (Video)
உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் இன்று உற்சாகத்துடன், கோலாலகலமாக தைப்பொங்கல் நாளை கொண்டாடி வருகின்றனர்.
உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், தைப்பொங்கலை முன்னிட்டு கிளிநொச்சியில் - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இன்றைய தினம் சிறப்பு ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இதன்படி, பாரம்பரிய விளையாட்டுக்கள் ,கோலப்போட்டி, விருந்தோம்பல் மற்றும் இன்னிசை நிகழ்வு என்பன மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.