மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் பரிதாப மரணம்
கம்பஹா, வெயங்கொடை, அலவ்வ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மேற்படி சிறுவன் தனது வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, சமையல் அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கீழ் பகுதியில் கையை வைத்துள்ள நிலையில் மின்சாரம் தாக்கிக் கீழே மயங்கி விழுந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
பின்னர், சிறுவனின் தந்தை உடனடியாகச் சிறுவனை வதுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சேர்த்தபோது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை வதுபிட்டிவல வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் அத்தனகல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
