மட்டக்களப்பில் உணவக உரிமையாளர் ஒருவர் கைது
மட்டக்களப்பு ஓட்டுமாவடி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான சிகரட்டுகளை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று இரவு 9.00 மணியளவில் ஓட்டுமாவடி பகுதியிலுள்ள உணவக ஒன்றினை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.
800 சிகரட்டுக்கள்
இதன் போது ஹோட்டல் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத 800 சிகரட்டுக்களை மீட்டதுடன் உணவக உரிமையாளரை கைது செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவரையும் சான்று பொருளான சிகரட்டுக்களையும் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
