கொக்குளாய் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த அரியவகை காட்டு விலங்கு (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் அரியவகை காட்டு விலங்கினமான அழுங்கு எனப்படும் விலங்கினம் புகுந்துள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து குறித்த வீட்டிற்கு சென்ற கொக்குளாய் பொலிஸார் குறித்த விலங்கினத்தினை பத்திரமாக மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்.

குறிப்பிட்ட அழுங்கினை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
அழுங்கு எனப்படும் அரியவகையான காட்டு விலங்கினம் முல்லைத்தீவு மாவட்ட பாரிய
வனங்களில் காணப்படும் விலங்கினமாக காணப்பட்டாலும் இது அருகிவரும் ஒரு
விலங்கினமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam