கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட வீடமைப்புத் தொகுதி! வசமாக சிக்கிய இளைஞர்
கொழும்பில் கூரிய ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரகசிய தகவலின் அடிப்படையில் மாளிகாவத்தை லக்சேத செவன வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீடுகள் திடீரென சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மாளிகாவத்தை போதிராஜா மாவத்தையைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேகநபரொருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதங்கள் மீட்பு
குறித்த நபரிடமிருந்து 03 வாள்கள், 02 கைக்கோடரிகள் மற்றும் கூரிய ஆயுதம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.