புத்தளத்தில் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை(Photos)
புத்தளம் - நுரைச்சோலை பகுதியில் இரும்புத் தடியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவமானது நேற்றையதினம் (30.04.2023) இடம்பெற்றுள்ளது.
தாக்கப்பட்ட நபர் நேற்று இரவு முதல் வீட்டிற்கு வருகை தராமையினால் குறித்த நபரை வீட்டு உறவினர்கள் தேடி சென்றுள்ளனர்.
மணல் திடலில் சடலமாக மீட்பு
இதன்போது தாக்கப்பட்ட நபர் வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள மணல் திடலில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் குறித்த நபரின் உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நுரைச்சோலை பொலிஸார் மற்றும் தடவியல்
பொலிஸார் நேரில் சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.
கிரிக்கெட் மைதானத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவரின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபர் பதுங்கிவிட்டதாகவும் மோப்ப நாயின் உதவியைக் கொண்டு சந்தேகநபரை தேடும் பணியில் ஈடுபட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
