காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் பலி(Video)
திருகோணமலையில் விறகு எடுக்க காட்டுக்கு சென்ற நபரொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை - வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதிக்குள் நேற்று(6) விறகு எடுக்க சென்றபோதே அந்த நபர் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
காட்டு யானை தாக்குதல்
சம்பவத்தில் உயிரிழந்தவர் அபேநாயக்க ஹேரத் 60 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் எரிவாயு முடிந்த நிலையில் சமைப்பதற்காக விறகு எடுக்க சென்ற போதே மறைந்திருந்த காட்டு யானை தாக்கியுள்ளது.
பொலிஸார் விசாரணை
சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு சப்த கன்னியர் ஆலய உற்சவத்துக்கு படையினர் தடை |