எட்டி உதைத்த இராணுவ அதிகாரி - காணொளியை பதிவு செய்த இளைஞருக்கு கொலை அச்சுறுத்தல்
குருநாகல் யக்கஹபிட்டிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர், எரிபொருள் வரிசையில் நின்றிருந்த இளைஞரை உதைத்ததை பதிவு செய்த இளைஞனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக காணொளியை பதிவு செய்த இளைஞர் இணைய ஊடகம் ஒன்றில் நடந்த விவாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் வழித்தடத்தில் இருந்த இளைஞரை இராணுவ வீரர்கள் சிலர் கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணையை இலங்கை இராணுவம் ஆரம்பித்துள்ளது.
தாக்குதலை நடத்திய இராணுவ அதிகாரி இராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐவர் அடங்கிய விசாரணை குழு நியமிப்பு
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஐவர் அடங்கிய விசாரணை குழு (CoI) நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் (SLA) தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை இன்று வெளியிட்ட இலங்கை இராணுவம், “குடிபோதையில் இருக்கும் பொதுமக்களின் வன்முறையான நடத்தையை முன்வைக்காமல் அவரைக் கேலி செய்வதற்காக” இராணுவ உறுப்பினரின் ஆக்ரோஷமான தன்மைக்கு ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் உடனடியாக ஐந்து பேர் கொண்ட விசாரணை குழுவை (CoI) நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam