காலியில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி
காலி - உடுகமை பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய, அந்த யுவதியின் சிறிய தந்தையை கைது செய்துள்ளதாக உடுகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயதான யுவதியே இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபரை உடுகமை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் திருமணமானவர் என்பதுடன், அவர் அம்பலமஹந்திய பிரதேசத்தில் வசித்து வரும் 46 வயதான நபர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த யுவதி தனது தந்தையுடன் வசித்து வந்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் யுவதியை சந்தேகநபர் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.