மட்டக்களப்பில் இறால் பிடிக்க சென்றவர் முதலை கடித்து சடலமாக மீட்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய உப்போடை நீரோடையில் (களப்பு) இறால் பிடிப்பதில் ஈடுபட்ட ஒருவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குமாரபுரம் புன்னைச்சோலையைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய ஆரோக்கியநாதன் மரியதாஸன் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த நபர் வழமைபோல நேற்று திங்கட்கிழமை மாலை பெரிய உப்போடைக் களப்பு பகுதில் இறால் பிடிப்பதற்கு சென்றுள்ளார். எனினும் குறித்த நபர் இரவாகியும் வீடுதிரும்பாததால் உறவினர்கள் அவரை தேடியுள்ளனளர்.
இந்தநிலையில் இன்று பகல் 3 மணியளவில் கிரியோடை நீரோடையில் முதலைக்கடித்து உயிரிழந்த நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகன மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam