மட்டக்களப்பில் இளைஞரொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது (Photos)
மட்டக்களப்பு - பெரிய கல்லாறு பகுதியில் மோட்டார்சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற இளைஞரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (25.05.2023) இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் - கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளில் சூட்சுமமாக எடுத்து செல்லப்பட்ட 20,000 மில்லி லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் அம்பாறை - பெரிய நீலாவணை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபரை, சான்று பொருட்களுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |