மட்டக்களப்பில் நடந்த மாபெரும் போராட்டத்தில் குழப்பம் (Video)
புதிய இணைப்பு
மட்டக்களப்பில் நடந்த மாபெரும் பேராட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமயத்தலைவர்களின் முயற்சியால் குழப்பம் விளைவிக்கவிருந்ததாக கருதப்படும் நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
சிலர் குழப்பம் விளைவித்தவரை தாக்கமுற்பட்டபோதும் மாணவர்கள் அந்த நபரை பாதுகாத்து சமயத்தலைவர்களிடம் ஒப்படைத்திருந்தனர்.
மாணவர்கள் சுற்றிவளைப்பு
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியானது இறுதி நாளின் இறுதி நேரத்தை எட்டியுள்ள நிலையில் திடீரென குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது நடைபெற்று வருகின்றது.
இறுதி நேரத்தில் பிரகடன உரையை நிகழ்த்துவதற்கு மாணவர்கள் தயாரான நிலையில் சிவப்பு மஞ்சள் கொடியினை எரிப்பதற்கு முற்பட்டிருந்த நிலையில் தடுக்கப்பட்டு குறித்த நபரை மாணவர்கள் சுற்றிவளைத்துள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இறுதி நிகழ்வும் பிரகடன உரையும் மட்டக்களப்பு காந்தி மைதானத்தில் முடிவடையும் எதிர்பார்க்கப்பட்டாலும் மக்களின் எழுச்சி மற்றும் திரள்நிலை காரணமாக பெவர் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
முதலாம் இணைப்பு
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் மட்டக்களப்பு நகரை பேரணி சென்றடைந்துள்ளது.
இறுதி நாளான இன்றைய (07.20.2023) பேரணியை வரவேற்பதற்காகவும் பிரகடனத்திற்காகவும் பெவர் மைதானம் தயாராகிறது.
தமிழர் தாயகத்தின் அரசியல் அபிலாசைகள் வலியுறுத்தும் பேரணி இன்று மட்டக்களப்பு காந்தி மைதானத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டாலும் மக்களின் எழுச்சி மற்றும் திரள்நிலை காரணமாக பிரகடன அறைகூவல் நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்துக்கு மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.
விளக்கேற்றி அஞ்சலி
எனினும் இலங்கை பொலிஸார் இதற்கு அனுமதி வழங்காததால் எழுச்சியுடன் மைதானத்துக்குள் பிரவேசிக்க அறவழியாளர்களும் முயற்சிப்பதாக பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவித்துள்ளன.
வடக்கில் இருந்த கிழக்கு நோக்கிய பேரணி தற்போது மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தை சென்றடைந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் பிரகடனம் முன்பாக, பேரணியாக சென்றோர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மணவர்களின் சிற்றுரையும் இடம்பெற்றதையடுத்து, பேரணி மட்டக்களப்பு நகர் நோக்கி நகரத் ஆரம்பித்தனர்.
இதன் போது மரபு வழித்தாயகம், சுயநிர்ணயம் என்பன போன்ற பொங்கு தமிழ்பிரகடனம் மூலம் தமிழர் உரிமைகளுக்கான கோசங்களுடன் பேரெழுச்சி பேரணி இன்னும் சற்று நேரத்தில் மைதானத்தை சென்றடையவுள்ளது.










பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
