மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்ட பிரமாண்ட சிறுவர் பூங்கா
சமூக நலன்புரி அமைப்பின் ஸ்தாபக தலைவர் க.சற்குணேஸ்வரன் ஸ்தாபித்து வழிநடத்திக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பை சமூக நலன்புரி அமைப்பின் விவேகானந்த சிறுவர் பூங்கா ஞாயிற்றுக்கிழமை(26.08.2024) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டடுள்ளது.
மட்டக்களப்பு நகரிலிருந்து ஏறத்தாழ 18 கிலோமீட்டர் தொலைவில் குருக்கள்மடம் ஏத்தாளைகுளம் பறவைகள் சரணாலயத்திற்கு அருகாமையில், குருக்கள்மடம் கிரான்குளம் கிராம எல்லைகளுக்கு மத்தியில் பாதுகாக்கப்பட்ட இலவச வைத்திய சேவையினை வழங்கும் சத்தியசாயி சஞ்ஜீவனி வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்களின் மில்லியன் கணக்கான நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்த பூங்கா சிறுவர்களுக்கான பொழுது போக்கு தளம் என்பதற்கு அப்பால் ஆன்மீக உணர்வை தூண்டும் ஒரு விவேகானந்தரின் ஆலயம் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு 07 அடி உயரமான நிற்கும் நிலையிலமைந்த விவேகானந்தரின் பல உருவச் சிலைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.