பாடசாலை ஒன்றில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!
தெனியாய, பெவர்லி தமிழ் மகா வித்தியாலயத்தில் எரிவாயு வெடிப்புச் சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
சமையலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடசாலை அறையொன்றில் ஆசிரியர்கள் தேனீர் தயாரிப்பதற்கு முற்பட்டபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலை தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று நேற்று இரவு 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்த போது எரிவாயு சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிவாயு கசிந்து இவ்வெடிப்பு இடம் பெற்றிருக்கலாம் என தெரியவருகிறது.
உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை
சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.


நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri