வாத்துவ பகுதியில் இடம்பெற்ற தீவிபத்து! இரு சிறுமிகளின் நிலை
வாத்துவ - வேரகம பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாத்துவ, வேரகமவில் உள்ள அல்விஸ் தோட்டத்தில் இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் போது பெற்றோர்கள் வீட்டில் இருக்கவில்லை எனவும், 14 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளை உள்ளூர்வாசிகள் பாதுகாப்பாக மீட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பிரதேசவாசிகளால் வாத்துவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், களுத்துறை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் வீட்டின் மேல் தளத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.