வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற கலந்துரையாடல்
வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் பங்குபற்றலோடு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலானது நேற்று (31.10.2022) இடம்பெற்றது.
இந்தக்கலந்துரையாடலில் வடமாகாணத்தில் போதைப்பொருள் பரவல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
வடமாகாணத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கை
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன், பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், கடற்படையினர், சுகாதார கல்வித்துறை அதிகாரிகள், வைத்தியர்கள், துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வடமாகாணத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்திய
அரசாங்கத்தின் பூரணமான ஒத்துழைப்பு வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உத்தரவாதம் வழங்கியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
