இரண்டு பேருந்துகளை மோதிவிட்டு கன்டனர் வாகனம் தப்பியோட்டம்(Video)
சட்டவிரோத மணலை ஏற்றிக்கொண்டு சென்ற கன்டனர் வாகனம் இரு பேருந்துகளை மோதிவிட்டு தப்பி சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வடமராட்சி - மந்திகை மடத்தடி சந்தி பகுதியிலேயே இன்று காலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியூடாக அனுமதியற்ற மணல் ஏற்றி சென்ற கன்டனர் வாகனமானது தமது வேக கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்து சம்பவத்திற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் சேதம்
டீசலை பெறுவதற்காக பயணம் செய்த பருத்தித்துறை தனியார் சேவை சங்க பேருந்தும், பருத்தித்துறையிலிருந்து கொக்குளாய் நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளே இந்த விபத்தில் சேதமடைந்துள்ளன.
இதில் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகள் எவருக்கும் எந்தவித இழப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
நெல்லியடி பொலிஸார் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நெல்லியடி மாலிசந்தி பிள்ளையார் ஆலய தேர்திருவிழா அன்று சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற கன்டனர் வாகனம் ஒன்றை கைப்பற்றுவதற்காக பருத்தித்துறை பொலிஸார் சென்றவேளை, தேர் திருவிழாவிற்கு சென்றிருந்த கண்டனர் வாகனம் 7 பேரை மோதித்தள்ளியுள்ளது.
இதன்போது காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி: தீபன்

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 12 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
