கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்! குற்றம் சாட்டும் சிங்கள அமைப்புக்கள்
யாழ். மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பதாக சிங்கள ராவய அமைப்பு உள்ளிட்ட சிங்கள அமைப்புக்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளன.
யாழில் உள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கள ராவய அமைப்பு உள்ளிட்ட சிங்கள அமைப்புக்களால் இந்த முறைப்பாடு தொடர்பான கடிதம் சபையின் அதிகாரியிடம் (07) கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்களவர்கள் பலவந்தாக வெளியேறவேண்டிய நிலை
இதன்போது இந்த அமைப்பினர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
கறுப்பு ஜூலை இன அழிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இருந்த சிங்களவர் பலவந்தமாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இலங்கை பாதுகாப்பு படையினர் தமிழ் மக்களை துன்புறுத்துவதாக அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது. யாழ்ப்பாணத்தை விட அதிகளவான தமிழ் மக்கள் கொழும்பில் இருக்கின்றனர்.
அத்துடன், யாழ். மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் இருக்கிறார்கள். அவர்கள் இங்கு சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். சிங்கள மக்களின் மனித உரிமைகளும் இந்நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழ் மற்றும் சிங்களம் உள்ளிட்ட அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோருவதாகவும் அந்த அமைப்பு அறிக்கை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்தியா மீதான 50% வரி: இது அரசியலமைப்பிற்கு எதிரானது! அமெரிக்க பொருளாதார நிபுணர் எதிர்ப்பு News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
