எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்-செய்திகளின் தொகுப்பு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஜூலை 11 மற்றும் 15ம் திகதிகளுக்கு இடையில் 38,000 மெட்ரிக் தொன் டீசல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜூலை 22 ஆம் திகதி வரை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெட்ரோல் கிடைக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது 11,000 மெட்ரிக் தொன் டீசல், 5,000 மெட்ரிக் தொன் பெட்ரோல், 30,000 மெட்ரிக் தொன் உலை எண்ணெய் மற்றும் 800 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,