மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்று வேலைத்திட்டம்(Photos)
பாடசாலைகளில் நீர் தேங்கும் இடங்களை துப்புரவு செய்து டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்த பாடசாலை சமூகம் உதவவேண்டும் என்பதுடன் அதற்கான தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்குவதற்கு சுகாதார திணைக்களம் தயாராகவுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் டிஜிட்டல் மயப்படுத்திய வெளிநோயாளர் பிரிவை நேற்றையதினம் (11.06.2023) நாயகம் அசேல குணவர்த்தன திறந்து வைத்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,“உங்களுடைய பாடசாலைகளை பெற்றோர்களின் பங்களிப்புடன் அதிபர் சகிதம் சுத்தம்
செய்ய வேண்டும். உங்களுக்கு ஏதாவது உதவிகளோ ஆலோசனைகளோ தேவைப்பட்டால் சுகாதார
அமைச்சின் விதிகளுக்கமைய எங்களால் அவற்றை வழங்க முடியும்.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்
உதவிகள் தேவையான பாடசாலைகள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஊடாகவும் மாவட்ட டெங்கு ஒழிப்புப் பிரிவினூடாகவும் பெற்றுக்கொள்ளலாம். டெங்கு பெருகும் இடங்கள் விசேடமாக நீர் தேங்கி நிற்கும் இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
நாளை மட்டுமல்ல டெங்கு நுளம்புகளின் தாக்கம் குறையும் வரையும் குறைந்த பின்னரும் தினமும் டெங்கு நுளம்புகளை அழிக்கும் வேலைத்திட்டங்களை செய்ய வேண்டும்.
மருத்துவ விடுதிகள் திறந்து வைப்பு
அத்துடன் சிகிச்சை பெறவருவோரில் புற்றுநோய் அறிகுறிகள் உள்ளவர்களை தனியாக சோதனைகளை முன்னெடுக்கும் வகையில் பிரிவொன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் மருத்துவ விடுதியில் ஏனைய நோயாளர்களுடன் சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் தனியாக நோயாளர் விடுதியானது சிறுநீரக நோயாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்யும் விசேட திட்டத்தின் கீழ் இந்த பிரிவுகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் பல்வேறு பிரிவுகளின் பணிப்பாளர்கள் மற்றும் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், நிர்வாக பிரிவினர் என பல தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











