போர் வெற்றி மற்றும் தோல்விகள் தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதி எழுதிய நூல்
முன்னாள் இராணுவ தளபதியான ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட (shantha kottegoda) எழுதிய “THE CONFLICT THAT ELUDED PEACE” என்ற நூலில் முதல் பிரதி நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் (Gotabaya Rajapaksa) கையளிக்கப்பட்டுள்ளது.
கோட்டேகொட இந்த பிரதியை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். சாந்த கோட்டேகொடவின் 36 ஆண்டு கால இராணுவ வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக கொண்டு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
தரைப்படைப் பிரிவின் மேஜர் பதவியில் இருந்து இராணுவ தளபதியாக ஓய்வுபெறும் வரை இராணுவத்தில் அவர் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கியிருந்தார்.
போர் களத்தில் பெற்ற வெற்றிகள் மாத்திரமின்றி பின்னடைவுகள் தொடர்பான சரிநிகர் சமனான அளவில் இந்த நூலில் ஒப்பிட்டுள்ளதாக கோட்டேகொட குறிப்பிட்டுள்ளார்.