லண்டனில் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுவன்
பிரித்தானியா - லண்டனின் Southall-ல் உள்ள குடியிருப்பு தெருவில் கத்திக்குத்துக்கு இலக்காகி 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு மேற்கு லண்டனின் Southall குடியிருப்பு தெருவில், சிறுவரொருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடலை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், உயிரிழந்தவரின் பெயர் Ashmeet Singh எனவும், 16 வயது எனவும், சிறுவனின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri