அம்பாறை - சொறிகல்முனையில் 13 வயது சிறுவனைக் காணவில்லை (Photos)
அம்பாறை - சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாகச் சவளக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இன்றைய தினம் (27.02.2023) சிறுவனின் தந்தை சவளக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தீபன் சயான் என்ற 13 வயதான சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல்போன சிறுவன்
மேலும், வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனின் தாயாரும் சொறிகல்முனையைச் சேர்ந்த தந்தையாரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதனையடுத்து, சிறுவன் தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
சம்பவ தினமான நேற்று (26.02.2023) சிறுவனை, வீரமுனை பகுதியில் மரண வீடு ஒன்றுக்கு அவரது தந்தை அழைத்துச் சென்ற நிலையில், சிறுவன் காணாமல் போயுள்ளார். சிறுவனை எங்குத் தேடியும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து, இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.