அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 9 பேர் உயிரிழப்பு:பலர் காயம்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இன்று (22.01.2023) நடைபெற்ற சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீன வழக்கப்படி இன்று (22.01.2023) புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துப்பாக்கிச்சூடு
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இன்று சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூடு குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 15 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
