வெளிநாடொன்றில் துப்பாக்கிச் சூடு! 9 பேர் பலி: பலர் காயம்
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் உள்ள மதுபானக் கடை அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது இன்று(21.12.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இந்த துப்பாக்கிச் சூட்டில் பத்து பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூடு
இரண்டு கார்களில் வந்த சுமார் 12 பேர் கொண்ட அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி குழு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் சந்தேநபர்களைக் கைது செய்ய அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, தென்னாப்பிரிக்கா உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri
'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா Cineulagam
அடக்கம் பண்ணிடுங்க.. குணசேகரன் அதிர்ச்சி திட்டம்! எதிர்நீச்சல் தொடர்கிறது '4 பிப்ரவரி' ப்ரோமோ Cineulagam