கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்த 9 ஈரானியர்கள் கைது (PHOTOS)
இலங்கைக்கு ஈரானில் இருந்து கடல் வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோ போதைப்பொருள் கடத்தி வந்த 9 ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்களை இலங்கை ஈரான் கடல் எல்லைப்பகுதில் வைத்து கைது செய்து கொழும்பு கடற்படை தளத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வாவின் பணிப்புரைக்கமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவிலன் வழிகாட்டலில் மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோத தலைமையிலான பொலிஸ் குழுவினர், கடற்படையுடன் இணைந்து குறித்த கடல் பரப்பில் சுமார் 15 தினங்களுக்கு மேலாக இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த கடல்பரப்பில் ஈரானில் இருந்து 200 கிலோக்கிராம் போதைப்பொருளை கடத்தி வந்த கப்பலை கடலில் வைத்து மறித்தபோது கப்பலில் இருந்த சுமார் 200 கிலோ போதைப்பொருளை கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி போட்டுள்ள நிலையில், கடத்தல்காரர் 9 பேரை கைது செய்ததுடன் அவர்கள் பாவனைக்காக வைத்திருந்த போதைப்பொருளையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்தவர்களையும், கப்பலையும் இன்று வியாழக்கிழமை அதிகாலை கொழும்பு கடற்படை முகாமிற்கு கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட கடத்தல் காரர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam