மட்டக்களப்பில் மேலும் 9 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்
மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 கிராம சேவகர் பிரிவும் கோறளைப்பற்று மத்தியில் ஒருபிரிவு உட்பட 9 கிராமசேவகர் பிரிவுகள் இன்று(22) முதல் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் தொடர்ந்து எழுமாறாக எடுக்கப்பட்டுவரும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று அதிகரித்து வருகின்றது. இந்த நிலைமையில் தொற்றாளர்கள் அதிகமாகக் கண்டறியப்பட்ட காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 164, 164ஏ , 164பி, 164 சி. 162 ஏ. 162பி, 167 சி, 167 பி, ஆகிய 8 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பரிவிலுள்ள 206 சி. கிராமசேவகர்
பிரிவு உட்பட 9 கிராமசேவகர் பிரிவுகள் இன்றிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு
முடக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் தற்போது 12 கிராசேவகர் பிரிவுகள்
தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.