துபாயில் அறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 85 இலங்கை பெண்கள்
துபாயில் தடுப்பு முகாம் ஒன்றில் அறைக்குள் இலங்கை பெண்கள் 85 பேர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அந்த அறையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த நிலையில் நாடு திரும்பிய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்

தம்புள்ளையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக துபாய் சென்ற தம்புளு ஓய பிரதேசத்தை சேர்ந்த லலிதா பத்மினி என்ற பெண் துபாய் தடுப்பு முகாமில் மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் நாடு திரும்பியுள்ளார்.
தான் அங்கு அனுபவித்த கசப்பான அனுபவங்கள் தொடர்பான அந்த பெண், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், தம்புள்ளை பொலிஸ் நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்திற்கும் அறிவித்த போதிலும் இதுவரை எந்த நியாயமும் கிடைக்கவில்லை என அந்த பெண் கூறியுள்ளார்.
துபாயில் கைவிடப்பட்ட நிலையில் இலங்கை பெண்

தம்புள்ளையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்தின் ஊடாக துபாய் அனுப்பி வைக்கப்பட்ட தனது சகோதரியான துலிகா பிரியந்தி என்பவர் அங்கு கைவிடப்பட்ட நிலைமையில் இருப்பதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் மூன்று மாதங்கள் துபாய் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தமது பிள்ளைகள் பெரும் தொகை பணத்தை கடனாக பெற்று தன்னை இலங்கைக்கு வரவழைத்ததாகவும் லலிதா பத்மினி கூறியுள்ளார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 15 மணி நேரம் முன்
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri