இலங்கையில் பதிவான கோவிட் மரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்கள்!
கோவிட் தொற்றுநோயால் இன்று வரை இறந்த 7,587 பேர் குறைந்தபட்சம் ஒரு அளவு தடுப்பூசியைக்கூட பெறவில்லை, இது அனைத்து இறப்புகளில் 80.7% ஆகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஷெனல் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றவர்கள் மத்தியில் இருந்து, 388 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன, இது மொத்த இறப்புகளில் 4.1% ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தரவைப் பார்க்கும் எவருக்கும் தடுப்பூசியின் முக்கியத்துவம் தெளிவாகப் புரியும் என்று அவர் கூறியுள்ளார்.
எனவே, பெற்றோர், பெரியவர்கள் அல்லது உறவினர்கள் 60 வயதுக்கு மேல் இருந்தும், இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு, விரைவில் கோவிட் தடுப்பூசி போட ஊக்குவிக்குமாறு வைத்தியர் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 5 நிமிடங்கள் முன்

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
