மூன்று விடுதிகளில் 8 பெண்கள் கைது
கல்கிஸ்சை பிரதேசத்தில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கிய மூன்று பாலியல் தொழில் விடுதிகளை முற்றுகையிட்ட பொலிஸார், எட்டு பெண்களை கைது செய்துள்ளனர்.
கல்கிஸ்சை பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.நீதிமன்றத்தில் பெறப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைய பொலிஸார் விடுதிகளை முற்றுகையிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் மூன்று பேர் விடுதிகளில் முகாமையாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். கல்கிஸ்சை காலி வீதி, விகாரை வீதி, 4வது ஒழுங்கை ஆகிய பகுதிகளில் இந்த விடுதிகள் இயங்கி வந்துள்ளன.
கைது செய்யப்பட்ட பெண்கள் 22 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் பயாகல, விஹாரஹேமபாலந்துர, பொக்குணுவிட்ட, கஹட்டகஸ்ஹந்திய, மடுல்சீமை, புவக்பிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri