காசாவில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 8,000 உடல்கள் - முழுமையாக மீட்க 7 ஆண்டுகள் தேவை
இஸ்ரேலின் இரண்டு ஆண்டுகாலத் தாக்குதலுக்குப் பிறகு, காசா பகுதியில் சுமார் 8,000 பலஸ்தீனர்களின் உடல்கள் இன்னும் கட்டிட இடிபாடுகளுக்கு அடியே சிக்கியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை மேற்கோள் காட்டி 'ஹாரெட்ஸ்' (Haaretz) நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
காசாவில் உள்ள மொத்த இடிபாடுகளில் இதுவரை ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவே அகற்றப்பட்டுள்ளது.
அதிர்ச்சி தகவல்
இடிபாடுகளை அகற்றும் பணி தற்போதுள்ள மந்தமான வேகத்தில் தொடர்ந்தால், அதனை முழுமையாக முடிக்க குறைந்தது ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனால், குண்டுவீச்சில் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் புதைந்து கிடக்கும் தங்களது உறவினர்களின் உடல்களை மீட்டு முறைப்படி அடக்கம் செய்ய முடியாமல் பலஸ்தீன குடும்பங்கள் நீண்ட காத்திருப்பில் உள்ளனர்.
காசாவின் சிவில் பாதுகாப்புத் துறையின் தரவுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இடிபாடுகளை அகற்றுவதற்குத் தேவையான கனரக இயந்திரங்களுக்குக் கடும் பற்றாக்குறை நிலவுவதாகவும், இது மீட்புப் பணிகளைப் பெருமளவு பாதிப்பதாகவும் பலஸ்தீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், இஸ்ரேல் தினசரி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் காசா சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
போர்நிறுத்தத்திற்குப் பிந்தைய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 828 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 2,342 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 72,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,72,000 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், காசாவின் 90 சதவீத மக்கள் குடியிருப்பு மற்றும் பொதுக் கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேரழிவிலிருந்து காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்குச் சுமார் 70 பில்லியன் டொலர் செலவாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan