நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள 75வது சுதந்திர தின நிகழ்வுகள் (photos)

Jaffna Kilinochchi Mannar Independence Day
By Theepan Feb 04, 2023 12:50 PM GMT
Report

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வின் வடக்கு மாகாண மட்ட நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (04.02.2023) இடம்பெற்ற 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றுள்ள நிலையில் மத தலைவர்களின் ஆசியுரையும் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள 75வது சுதந்திர தின நிகழ்வுகள் (photos) | 75Th Independence Day Organized Across The Country

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள் பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இலங்கையின் 75வது சுதந்திர தினம் நிகழ்வுகள் நெல்லியடி கொலியன்ஸ் விளையாட்டு மைதானத்திலும் இடம்பெற்றுள்ளன.

செய்தி: எரிமலை

கல்முனை

இலங்கையின் 75 வது சுதந்திரதின நிகழ்வு இன்று கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தலைமையில் இன்று (04.02.2023)  சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள 75வது சுதந்திர தின நிகழ்வுகள் (photos) | 75Th Independence Day Organized Across The Country

இதன்போது பிரதிக் கல்விப் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையிலும் சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றதுடன் சமாதான புறாவும் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி: பாரூக் ஷிஹான்

கிளிநொச்சி

75வது சுதந்திர தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் பொது இடங்கள், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள 75வது சுதந்திர தின நிகழ்வுகள் (photos) | 75Th Independence Day Organized Across The Country

கிளிநொச்சி மாவட்டத்தின் அரச திணைக்களங்களில் தேசிய கொடியும் இதன்போது ஏற்றப்பட்டுள்ளது.

இதேவேளை மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன், துப்பரவாக்கும் பணிகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி: எரிமலை

வவுனியா

சுதந்திர தினத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மக்கள் ஒன்றியத்தினால் வாகன பேரணியொன்று இன்று (04.02.2023 ) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெருமளவான பகுதிகளில் இலங்கையில் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதுடன் கறுப்பு கொடிகளையும் கட்டி தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள 75வது சுதந்திர தின நிகழ்வுகள் (photos) | 75Th Independence Day Organized Across The Country

இதன்போது சுதந்திர தினத்திற்கு ஆதரவாக இவ்வாகனப் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து வாகனங்களிலும் தேசியக்கொடிகள் கட்டப்பட்டு வாகனப்பேரணி வவுனியா நகரை வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வவுனியா நகரசபை மைதானத்திலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்ததனை தொடர்ந்து சிங்களம் மற்றும் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள 75வது சுதந்திர தின நிகழ்வுகள் (photos) | 75Th Independence Day Organized Across The Country

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி சஜீவன் மற்றும் கிராம அலுவலர்கள், வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி: ஷான், திலீபன்

மன்னார்

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (4.02.2023) 75வது சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள 75வது சுதந்திர தின நிகழ்வுகள் (photos) | 75Th Independence Day Organized Across The Country

இந்நிலையில் மன்னார் பிரதான பாலத்தில் சுதந்திர தின பேரணியொன்றும் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த பேரணியில் பொலிஸார், பாடசாலை மாணவர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி: ஆஷிக்

மட்டக்களப்பு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (04.02.2023) வெபர் மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள 75வது சுதந்திர தின நிகழ்வுகள் (photos) | 75Th Independence Day Organized Across The Country

இந்நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு தொடர்ந்து மாவட்ட செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள 75வது சுதந்திர தின நிகழ்வுகள் (photos) | 75Th Independence Day Organized Across The Country

மட்டக்களப்பு - மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் சுதந்திர நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயகத்தின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

செய்தி: ருஷாந்தன்





GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US